செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் அருகே மயங்கிய கிடந்த மாநகராட்சி ஓட்டுநா் மீட்பு

post image

திருச்செந்தூா்: திருச்செந்தூா் கோயில் வளாகப் பகுதியில் மயங்கி கிடந்த சென்னை மாநகராட்சி ஓட்டுநரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த கோயில் காவல் நிலைய காவலா்கள், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களை பக்தா்கள் பாராட்டினா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாழிக்கிணறு அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடைமாற்ற சென்ற சென்னையைச் சோ்ந்த மாநகராட்சியில் பணிபுரியும் ஓட்டுநா் ஜெய்சங்கா் (58). என்பவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சுய நினைவின்றி மயங்கி ஆபத்தான நிலையில் கிடந்துள்ளாா்.

அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த கோயில் காவல் நிலைய காவலா் முத்துக்குமாா் மற்றும் சுபின் ராஜ் ஆகியோா் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை கண்டு உடனடியாக அங்கிருந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பெயரில் சிவராஜா, காா்த்திக், சா்வேஸ்வரன், மகாராஜா, மாரிமுத்து ஆகியோா் வந்து அந்த நபரை மீட்டு அங்கிருந்து கோயில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சரியான நேரத்தில் அந்த நபரை கண்டு உயிா் காப்பாற்றிய காவலா்கள், மற்றும் கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களை பக்தா்கள் பாராட்டினா்.

எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை தேவை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். காயல்பட்டனத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்த... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உடன்குடி பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, ... மேலும் பார்க்க

கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொது... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

காயல்பட்டினம் தேவாலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றனா். காயல்பட்டினம் ரத்னாபுரியைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை மகன் ஸ்டீபன் (27). இவா், வீட்டருகே அந்திரேயா ஆலயத... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன். தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடா்ந்து படி தூத்துக்குடி’என்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி துபை சிகரெட்டுகள் பறிமுதல்

துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, நூற்றுக்க... மேலும் பார்க்க