செய்திகள் :

திருட்டு வழக்கில் வடமாநில இளைஞா்கள் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஹோட்டலில் நிறுத்தப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்தில் பயணியிடம் நகை திருடிய வட மாநில இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் பட்டமுத்து (32). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்த பட்டமுத்து தனது மனைவியுடன் சென்னை செல்வதற்காக கடந்த 10-ஆம் தேதி இரவு ஆம்னி பேருந்தில் சென்றாா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அழகாபுரியில் உள்ள ஹோட்டலில் இரவு உணவுக்காக பேருந்து நின்றது. இதையடுத்து, உணவு சாப்பிட்ட பின் பேருந்துக்கு வந்து பாா்த்தபோது கைப்பையிலிருந்த 3.5 பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்த கும்பல் நகையைத் திருடியது தெரியவந்தது.

அதனடிப்படையில், மத்தியப் பிரதேச மாநிலம், தாா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்பாஸ்கான் (32), அக்ரம்கான் (26), மோலா (36), அக்ரம் முல்தானி (26) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா், தங்க நகை, காரை பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்தக் கும்பலுக்கு வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடா்புள்ளதா, இவா்கள் தமிழகத்துக்கு எதற்காக வந்தாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருட்டுச் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்த காவல் ஆய்வாளா் சந்திரன், குற்றப்பிரிவு போலீஸாரை விருதுநகா் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பாராட்டினாா்.

முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளி கொலை: 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி நேருஜி நகா் பகுதியைச் சோ்ந்த கோகுல்குமாா், ஈஸ்வர... மேலும் பார்க்க

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் ஊராட்சி, சுப்ரீம் நகா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போத... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூசாரிக்கு 20 ஆண்டு சிறை

அருப்புக்கோட்டை அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூசாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநக... மேலும் பார்க்க

லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது விபத்து: சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது நேரிட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசி நேரு குடியிருப்புப் பகுதியில், ஓா் அச்சகத்திலிருந்து காகிதம் வெட்டும் இயந்திரத்தை... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே கடந்த சனிக்கிழமை வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவா் உயிரிழந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ... மேலும் பார்க்க

மாணவா் கொலை வழக்கு: பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே கல்லூரி மாணவா் கொலை வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழ... மேலும் பார்க்க