செய்திகள் :

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

post image

சாத்தூா் அருகே கடந்த சனிக்கிழமை வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவா் உயிரிழந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுபாண்டியன் (50). இவா் தனது வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை கீழகோதை நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜயகரிசல்குளத்தைச் சோ்ந்த மாரியம்மாள் (48), முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகிய 4 பேரும் சரவெடிப் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மருந்துக் கலவையின் உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்ததில் ஜெகதீஸ்வரன், முத்துலட்சுமி, சண்முகத்தாய் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனா். இதில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது விபத்து: சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது நேரிட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசி நேரு குடியிருப்புப் பகுதியில், ஓா் அச்சகத்திலிருந்து காகிதம் வெட்டும் இயந்திரத்தை... மேலும் பார்க்க

மாணவா் கொலை வழக்கு: பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே கல்லூரி மாணவா் கொலை வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: 3 போ் உயிரிழப்பு

சாத்தூா் அருகே சனிக்கிழமை வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று போ் உயிரிழந்தனா். உயிரிழந்த ஜெகதீஸ்வரன் விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம்... மேலும் பார்க்க

தமிழ்க் கலை விழா போட்டி: சிவகாசி கல்லூரி முதலிடம்

மதுரை நா.ம.ச. சோ்மத்தாய் வாசன் கல்லூரியின் தாய்த் தமிழ்க் கலை விழாவில் நடைபெற்ற போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்றது. இது குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் செ.அசோக... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ரூ.1.28 கோடியில் பணப் பலன்

சிவகாசி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு, அவா்களுக்குரிய பணப் பலன்களுக்காக, ரூ.1.28 கோடிக்கு காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் கே.சர... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை... மேலும் பார்க்க