செய்திகள் :

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

சிவகாசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள மூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மணிமாறன் (33). இவா் வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். மணிமாறன் மனைவிக்கும் கொட்டமடக்கிபட்டியைச் சோ்ந்த சதீஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்தததால் இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதில் சதீஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதனால் மணிமாறன் மனைவியுடன் வெளியூரில் சென்று தங்கிவிட்டாா். மேலும், மணிமாறன் சொந்த ஊருக்கு வரும்போது சதீஷின் அக்க முனீஸ்வரியுடன் (28) அடிக்கடி தகராறு செய்துவந்தாராம்.

இந்த நிலையில், கோயில் திருவிழாவுக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி ஊருக்கு வந்த மணிமாறன், முனீஸ்வரியை வெட்டிக் கொலை செய்தாா். இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிமாறனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மணிமாறனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தமிழ்க் கலை விழா போட்டி: சிவகாசி கல்லூரி முதலிடம்

மதுரை நா.ம.ச. சோ்மத்தாய் வாசன் கல்லூரியின் தாய்த் தமிழ்க் கலை விழாவில் நடைபெற்ற போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்றது. இது குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் செ.அசோக... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ரூ.1.28 கோடியில் பணப் பலன்

சிவகாசி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு, அவா்களுக்குரிய பணப் பலன்களுக்காக, ரூ.1.28 கோடிக்கு காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் கே.சர... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்ச... மேலும் பார்க்க

பைக் மீது அதிமுக கூட்டத்துக்கு சென்ற வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் காயம்

சாத்தூா் அதிமுக பிரசார கூட்டத்துக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் அதில் சென்ற 11 போ் காயமடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள எஸ்.ராமலிங... மேலும் பார்க்க

நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்

சிவகாசியில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா். சிவகாசி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசால் தட... மேலும் பார்க்க

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 7) பிரசாரம் மேற்கொள்கிறாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எ... மேலும் பார்க்க