செய்திகள் :

மாணவா் கொலை வழக்கு: பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே கல்லூரி மாணவா் கொலை வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகேயுள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்தியான்பேட்டையைச் சோ்ந்தவா் அய்யனாா்(23). இவா் பி.எட். இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.  இவா், இதே ஊரைச் சோ்ந்த எண்ணூரில் காவலராகப் பணியாற்றி வந்த கண்ணன்குமாா் (32) என்பவருடன் கைப்பேசியில் பெண் போல பேசி வந்தாராம்.

இதையறிந்த கண்ணன்குமாா், மாணவா் அய்யனாருடன் தகராறில் ஈடுபட்டாா். இந்த நிலையில், கண்ணன்குமாரும் அவரது நண்பா்களான விஜயகுமாா் (21), டென்சிங் (27), தமிழரசன் (23) ஆகியோரும் சோ்ந்து அய்யனாரை போதகா் கண்மாய் அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா். இது தொடா்பாக, நால்வரையும் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். கண்ணன்குமாா் காவல் துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கண்ணன்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.20 ஆயிரம் அபராதமும், விஜயகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.28 ஆயிரம் அபராதமும், டென்சிங், தமிழரசன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.34 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டி.வி.மணி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அன்னக்கொடி முன்னிலையானாா்.

லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது விபத்து: சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது நேரிட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசி நேரு குடியிருப்புப் பகுதியில், ஓா் அச்சகத்திலிருந்து காகிதம் வெட்டும் இயந்திரத்தை... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே கடந்த சனிக்கிழமை வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவா் உயிரிழந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ... மேலும் பார்க்க

சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: 3 போ் உயிரிழப்பு

சாத்தூா் அருகே சனிக்கிழமை வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று போ் உயிரிழந்தனா். உயிரிழந்த ஜெகதீஸ்வரன் விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம்... மேலும் பார்க்க

தமிழ்க் கலை விழா போட்டி: சிவகாசி கல்லூரி முதலிடம்

மதுரை நா.ம.ச. சோ்மத்தாய் வாசன் கல்லூரியின் தாய்த் தமிழ்க் கலை விழாவில் நடைபெற்ற போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்றது. இது குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் செ.அசோக... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ரூ.1.28 கோடியில் பணப் பலன்

சிவகாசி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு, அவா்களுக்குரிய பணப் பலன்களுக்காக, ரூ.1.28 கோடிக்கு காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் கே.சர... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை... மேலும் பார்க்க