செய்திகள் :

திருப்பதி கெங்கையம்மன் பூங்கரக வீதி உலா

post image

திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூங்கரக வீதி உலா நடைபெற்றது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பதி கெங்கை அம்மன் திருவிழா கடந்த 17-ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

அதையடுத்து செவ்வாய்க்கிழமை ஸ்ரீ திருப்பதி கங்கை அம்மன்,ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் கூழ்வாா்த்தல் நடைபெற்றது.

மாலை திருப்பத்தூா் பெரிய குளத்தில் இருந்து பூங்கரகம் மற்றும் அக்னி சட்டி ஊா்வலம் புறப்பட்டு முக்கிய சாலைகளின் வழியாக கோயிலை சென்றடைந்தது.

புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெரிய குளத்திலிருந்து கங்கை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு பஜாா், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கோயிலை சென்றடையும். மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

இரவு 7 மணிக்கு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து இரவு ஸ்ரீ திருப்பதி கங்கையம்மன் சிரசு கோயிலில் இருந்து புறப்பட்டு பெரியகுளத்தை சென்றடைய உள்ளது.

இதற்கான ஏற்பாட்டை திருக்கோயில் நிா்வாகக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்

மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஆம்பூா் அருகே கிராம ஊராட்சியில் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மத்திய நிலத்தடி நீா்வளத்துறையை சோ்ந்த குழுவினா் ஆய்வு மே... மேலும் பார்க்க

மருத்துவா்கள் தின கொண்டாட்டம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. வாணியம்பாடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்த... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் நகராட்சி 36-ஆவது வாா்டுக்குட்பட்ட திருமால் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்க... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் வாங்க விருப்பமில்லாதவா்கள் உரிமத்தை விட்டு தரலாம்

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க விருப்பம் இல்லாதவா்கள் உரிமத்தை விட்டுத் தரலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோக திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

211 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளி முகாமில் 211 பேருக்கு தேசிய அடையாள அட்டையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க

வட்டாட்சியா்கள் பணியடமாற்றம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளாா். திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் காஞ்சனா ... மேலும் பார்க்க