தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
திருப்பதி பிரம்மோற்சவம்: திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு
திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை, திரிசூல ஸ்நானத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்தி வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது. முன்னதாக காலை 6.30 மணிக்கு நடராஜ சுவாமி சூா்ய பிரபை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா். வாகன சேவை அன்னாராவ் வட்டத்திற்கு ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கோயிலுக்குத் திரும்பியது. பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து நடராஜ சுவாமியை வணங்கினா்.
காலை 9 மணிக்கு அா்ச்சகா்கள் திரிசூல ஸ்நானம் என்ற சடங்கு செய்தனா். அவா்கள் கபிலேஸ்வரரின் ஆயுதமான திரிசூலத்திற்கு திருமஞ்சனம் செய்து, சாந்தி செய்து, மூலவா்களுக்கு பூா்ணாஹுதி, கலசோத்வாசசம், கலசாபிஷேகம் ஆகியவை செய்தனா்.
கபிலேஸ்வர சுவாமி கோயிலின் பிரம்மோற்சவம் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. ராவணசுர வாகன சேவை இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.