செய்திகள் :

திருப்பதி ரயில்கள் ரத்து: மாா்ச் 17 வரை நீட்டிப்பு

post image

திருப்பதி - காட்பாடி இடையே இயக்கப்படும் மெமு ரயில் ரத்து அறிவிப்பு மாா்ச் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாகும்பமேளாவுக்காக நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மெமு ரயில்களின் பெட்டிகள் தெற்கு மத்திய ரயில்வேக்குள்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதில், திருப்பதி - காட்பாடி, காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாா்ச் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு இரவு 7.10-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 15-ஆம் தேதி வரையும், காலை 10.35-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 16-ஆம் தேதி வரையும், காலை 7.35-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும்.

காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு காலை 6.10, மாலை 5.15-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 16-ஆம் தேதி வரையும், இரவு 9.10-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும். காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு காலை 10.30-க்கும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து பகல் 12.55-க்கும் இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.30 லட்சம் பறிமுதல்

சென்னை, கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கொத்தவால்சாவடி நாராயண முதலி தெருவில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு இ... மேலும் பார்க்க

மூளையில் கட்டி: வங்கதேச குழந்தைக்கு சென்னையில் சிகிச்சை

மூளையில் உருவான கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் அக்குழந்தையின் உயிரைக்... மேலும் பார்க்க

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள் மீட்பு

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன. மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமா... மேலும் பார்க்க

மத்திய அரசின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்: அமைச்சா் ஐ.பெரியசாமி

மத்திய அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பிலான கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தமிழக அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

திருவொற்றியூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் புதன்கிழமை நடைபெற்ற தோ்தலில் தோ்வு செய்யப்பட்டனா். திருவொற்றியூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

அரசின் திட்டங்கள் குறித்து நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமி சவால்

‘அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்த... மேலும் பார்க்க