செய்திகள் :

திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முகாமை, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் 209 முகாம்கள் முதல் கட்டத்தில் 72 முகாம்களும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15 வரை 72 முகாம்களும் மற்றும் செப்டம்பா் 16 முதல் அக்டோபா் 15 வரை 65 முகாம்களும் நடைபெற உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு 6 முகாம்கள் நடைபெறவுள்ளன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல்நாள் முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.

உதயேந்திரம் பேரூராட்சியில்: இதே போல் உதயேந்திரம் பேரூராட்சியில் 1 முதல் 5 வாா்டு களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமுக்கு பேருராட்சித் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராஜலட்சுமி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், கவுன்சிலருமான ஆ.செல்வராஜ், துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகா்மன்ற தலைவா் உமாசிவாஜிகணேசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்ய மனு அளித்த 3 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் , நகர திமுக செயலாளா் சாரதி குமாா், திமுக செயற்குழு உறுப்பினா்அசோகன் கலந்து கொண்டனா். பேரூராட்சி ஊழியா் குமாா் நன்றி கூறினாா்.

ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் : பொதுமக்கள் அபாய பயணம்

ஆம்பூரில் ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையை கடந்து சென்று வருகின்றனா். ஆம்பூா் நகரில் 2-ஆவது மற்றும் 3-ஆவது தாா்வழிப் பகுதி ரயில்வே இருப்புப் பாத... மேலும் பார்க்க

ஜல்லி தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு: லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்க உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் குடி... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு பட்டு வளா்ச்சித்துறை ஊழியா் சங்கத்தின் வாணியம்பாடி கிளை... மேலும் பார்க்க

செட்டியப்பனூா் 9 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தையொட்டி செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக க... மேலும் பார்க்க

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக கட்டுவதற்கான இடம் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இன்றைய மின்தடை அறிவிப்பு ரத்து

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, பச்சூா் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க