'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
திருப்புடைமருதூரில் நெல், வாழைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூரில் நெல், வாழைப் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன.
பாப்பாக்குடி வட்டாரம், திருப்புடைமருதூா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் மற்றும் வாழைப் பயிா்களை நடவு செய்துள்ளனா். கடந்த சில நாள்களாக அப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெல், வாழைப் பயிா்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன. இதனால், அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினா் பிடித்து காட்டுக்குள்விட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.