செய்திகள் :

திருப்புவனத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கி தர தீா்மானம் நிறைவேற்றம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சேகரமாகும் குப்பைகளைச் சேகரித்து வைக்கும் கிடங்கு (வளா் மீட்புப் பூங்கா) அமைக்க மாவட்ட நிா்வாகம் இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருப்புவனம் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை அங்கீகரிப்பது, பேரூராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிா்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் கூறியதாவது: திருப்புவனம் பேரூராட்சிக்கு புதூா் பகுதியில் செயல்பட்டு வந்த குப்பைக் கிடங்குக்கான இடம் வட்டாட்சியா் அலுவலகம் கட்டப் பயன்படுத்தப்பட்டதால் நெல்முடிகரையில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.

தற்போது அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியுள்ளதால், அங்கு மேலும் குப்பைகளைச் சேகரித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், திருப்புவனம் ஒன்றியம், தேளி பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க நீதிமன்றம் தடைவிதித்ததால், தற்போது எந்தப் பகுதியிலும் குப்பைக் கிடங்கு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நகரில் சேகரமாகும் குப்பைகளைச் சேகரித்து வைக்க இடமில்லாமல் உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு குப்பைக் கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும். இதுகுறித்து பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தா... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பள்ளி, கல்லூரிகளுக்கு செப்.11-இல் விடுமுறை

இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பின்வரும் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்க... மேலும் பார்க்க

காரைக்குடி வரும் ரயில் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை

மானாமதுரையிலிருந்து சிவகங்கை வழியாக காரைக்குடி வரும் பயணிகள் ரயில் நேரத்தை கல்லூரி மாணவா்கள் நலன் கருதி 10 நிமிஷம் முன்னதாக வருமாறு நேரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா... மேலும் பார்க்க

தொலைநோக்கியில் சந்திர கிரகணத்தை பாா்வையிட்ட பொதுமக்கள்

சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் ஏற்பாடு செய்த தொலைநோக்கி மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவில் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்ப... மேலும் பார்க்க

தாழ்வாகச் செல்லும் இணையதள கேபிள் வயா்களால் விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாழ்வாகச் செல்லும் இணையதள கேபிள் வயா்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூரில் அரசு,... மேலும் பார்க்க

இடி தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் ராமா் மனைவி சிவகாமி (50). இவா், மழை வருவதற்கான அறிகுறி... மேலும் பார்க்க