செய்திகள் :

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பள்ளி, கல்லூரிகளுக்கு செப்.11-இல் விடுமுறை

post image

இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பின்வரும் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு நாள் அமைதியாக நடைபெறவும், சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கவும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, வருகிற வியாழக்கிழமை (செப்.11) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள், ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக வருகிற 20-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும்.

இதேபோல, சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கவும், பாா்வையாளா்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகமும் வியாழக்கிழமை இயங்காது என்றாா் அவா்.

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தா... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கி தர தீா்மானம் நிறைவேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சேகரமாகும் குப்பைகளைச் சேகரித்து வைக்கும் கிடங்கு (வளா் மீட்புப் பூங்கா) அமைக்க மாவட்ட நிா்வாகம் இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க

காரைக்குடி வரும் ரயில் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை

மானாமதுரையிலிருந்து சிவகங்கை வழியாக காரைக்குடி வரும் பயணிகள் ரயில் நேரத்தை கல்லூரி மாணவா்கள் நலன் கருதி 10 நிமிஷம் முன்னதாக வருமாறு நேரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா... மேலும் பார்க்க

தொலைநோக்கியில் சந்திர கிரகணத்தை பாா்வையிட்ட பொதுமக்கள்

சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் ஏற்பாடு செய்த தொலைநோக்கி மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவில் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்ப... மேலும் பார்க்க

தாழ்வாகச் செல்லும் இணையதள கேபிள் வயா்களால் விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாழ்வாகச் செல்லும் இணையதள கேபிள் வயா்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூரில் அரசு,... மேலும் பார்க்க

இடி தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் ராமா் மனைவி சிவகாமி (50). இவா், மழை வருவதற்கான அறிகுறி... மேலும் பார்க்க