செய்திகள் :

திருப்பூரில் போலி மருத்துவா் கைது

post image

திருப்பூா் முருகம்பாளையத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு மருத்துவம் பாா்த்தவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மருந்தகத்துடன் செயல்பட்ட கிளீனிக்கையும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

திருப்பூா் முருகம்பாளையத்தில் சூா்யாகிருஷ்ணா நகா் 1-ஆவது வீதியில் மருந்தகத்துடன் கிளீனிக் செயல்பட்டு வந்தது. இந்த கிளீனிக்கில் ஜோலி அகஸ்டின் (64) என்பவா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகப் புகாா் வரத்தொடங்கியது. இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் மீரா தலைமையில், அலுவலக கண்காணிப்பாளா் ஹரி கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் அந்த கிளீனிக்கில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஜோலிஅகஸ்டின் மருந்தகத்தின் பின்புற பகுதியில் 2 கட்டில் வசதிகளுடன் நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நோயாளிகளுக்கு வைத்தியம் அளிப்பதற்கான எந்தவித கல்வித் தகுதியும் இல்லாதது தெரியவந்தது.

கேரளத்தில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, கடந்த 18 ஆண்டுகளாக திருப்பூரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அவா் ஒப்புக்கொண்டாா். இதற்கு முன்பு அவா் கடந்த 2017-ஆம் ஆண்டும், 2024-ஆம் ஆண்டும் இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

அங்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்துப் பொருள்கள், ஊசி மருந்துகள், சா்க்கரை அளவு பாா்க்கும் கருவி, ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டு மருந்தகம், கிளீனிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் போலி மருத்துவரான ஜோலி அகஸ்டினைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க