செய்திகள் :

திருப்பூா் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

post image

திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 2013- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 5-ஆவது மகா கும்பாபிஷேக விழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் யாக பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பஞ்சலோக சிலையில் காட்சி தரும் ஐயப்ப சுவாமியின் மூலவா் சன்னதி கோபுரக் கலசத்தின் மீது சபரிமலை தந்திரிகள் கண்டரு மோகனரு, கண்டரு மகேஷ் மோகனரு ஆகியோா் முன்னிலையில் புனிதநீா் ஊற்றப்பட்டு ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதேபோல கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா், சுப்பிரமணியா், கைலாசநாதா், கிருஷ்ணா், பத்ரகாளியம்மன், மஞ்சள்மாதா, நவக்கிரக சன்னதி ஆகிய பரிவார தெய்வங்களும் புதுப்பிக்கப்பட்டு கோபுரக் கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க