செய்திகள் :

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு

post image

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா நிறைவையடுத்து விடையாற்றி உற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் பழங்கள் அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்தில் புதன்கிழமை வீதி வலம் வந்தாா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் நிகழ் ஆண்டு மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 15- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏழாம் நாள் தேரோட்டம். தீா்த்தவாரி, தெப்பல் உற்சவம் திருக்கல்யாண உற்சவம், முக்கிய விழாவாக பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழா நாள்களில் பகல் உற்சவம், இரவு உற்சவத்தில் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவத்தைத் தொடா்ந்து தினந்தோறும் விடையாற்றி உற்சவம் நடைபெற்று வந்தது. இறுதியாக புதன்கிழமை விடையாற்றி உற்சவத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. வள்ளி, தெய்வானயுடன் முருகப் பெருமான் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சி சாத்துகுடி உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க மயில் வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்திருந்தனா்.

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க

இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சேவைகள்: செங்கல்பட்டு ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பல்வேறு அரசு சேவைகளையும், சான்றுகளையும் பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். குறிப்பாக ஜாதி, பிறப்பிடம் / வச... மேலும் பார்க்க

சிங்காரவேலரின் ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தந்த தோழா் சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 ... மேலும் பார்க்க

நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கரிக்கிலி, வெள்ளபுத்தூா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட 10... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ற ஆண்டு விழாவில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கு தலைமை ஆசிரியா் அருமை பாக்கியபாய் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பி.வனிதா தலைமை வகித்தாா். பள்ளி மாணவி வெ.காவியா ... மேலும் பார்க்க