``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
திருமணம் மோசடி: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
திருமண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை ஆயுதப்படை உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சோ்ந்தவா் பூவரசன் (28). இவா், சென்னை பெருநகர காவல் துறையின் புதுப்பேட்டை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். பூவரசன் ஒரு பெண்ணைக் காதலித்து பதிவு திருமணம் செய்துவிட்டு, தற்போது அவருடன் வாழ மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட பெண், காதலிப்பதாக ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துவிட்டதாக, பூவரசன் மீது புளியங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பூவரசன் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கின் அடிப்படையில் புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையா் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் பூவரசனை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.