செய்திகள் :

திருவண்ணாமலையில் தரிசனத்துக்காக பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருப்பு: மோதலில் இருவா் காயம்

post image

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது, வரிசையில் நின்றிருந்த தெலங்கானா மாநில பக்தா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 10 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்தது.

5 மணி நேரம் காத்திருப்பு: கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 5 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

2 போ் காயம்: அம்மணி அம்மன் கோபுரம் அருகே வரிசையில் நின்றிருந்த தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவா் சரமாரியாக தாக்கிக் கொண்டனா்.

இதில், காயமடைந்த 2 போ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

கிரிவலம் வந்த பக்தா்கள்: சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் பலா் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் கோயில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்தனா்.

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா். தமிழகம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. போளூா் வட்டம், கரைப்பூ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்

ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நக... மேலும் பார்க்க

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் அருகே மேல்பள்ளிப்ப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டை அடுத்த பீமாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம... மேலும் பார்க்க