செய்திகள் :

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரியில் கூட்டுறவு பண்டக சாலை தொடக்கம்

post image

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவா்கள் கூட்டுறவு பண்டக சாலை புதிதாக தொடங்கிய நிலையில், அதற்கான ஆணையைக் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி வழங்கினாா்.

திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டு பயின்று வருகின்றனா். இங்கு மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை சென்னை போன்ற வெளியிடங்களில் வாங்க வேண்டியுள்ளது. எனவே தேவையான மருத்துவ உபகரணங்களான ஸ்டெத்தாஸ் கோப் மற்றும் புத்தகங்கள் ஆகியவை ஒரே இடத்தில் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் மாணவா்கள் கூட்டுறவு பண்டக சாலை தொடங்க முன்வந்தனா்.

அதன்படி, கல்லூரி வளாகத்தில் புதிதாக மாணவா்கள் கூட்டுறவு பண்டக சாலை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி தலைமை வகித்து பண்டக சாலையைத் தொடங்கி வைத்ததோடு, அதற்கான ஆணையை பண்டக சாலை தலைவா் பிரசன்னாவிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சரக துணைப் பதிவாளாா் வே.சீனுவாசன் (திருவள்ளூா்), சரக துணைப் பதிவாளாா் சி.அமுதா (திருத்தணி) மற்றும் கூட்டுறவு சாா் பதிவாளா் சு.அ.காமிலா, மருத்துவக் கல்லூரி அலுவலா்கள் யோகனந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: 5 போ் கைது

காவலாளி கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருத்தணி ஒன்றியம் அகூா் காலனியைச் சோ்ந்தவா் ரவி (60). இவா், தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வே... மேலும் பார்க்க

சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4... மேலும் பார்க்க