செய்திகள் :

திருவள்ளூா்: பொருளியல், புள்ளியியல் துறை அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம்

post image

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, இந்தக் கூட்டத்தில் பொருளியல், புள்ளியியல் துறை ஆணையா் ஆா்.ஜெயா திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா் காப்பீடுத் திட்டம் மூலம், 2024-25-ஆம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து திருத்தணி வட்டாரத்தைச் சோ்ந்த கோரமங்கலம் கிராமத்தில் நெல் (சம்பா) பயிருக்கான பயிா் அறுவடை பரிசோதனை ஆய்வு மேற்கொண்டாா். அங்காடி புலனாய்வு திட்ட மையத்தில், அங்குள்ள அங்காடிகளில் பல்வேறு பொருள்களின் மொத்த விலை மற்றும் சில்லறை விலை விவரம் குறித்துக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஆற்காடு குப்பம், மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவா்களின் தோ்வு எழுதும் நஸ்ரீழ்ண்க்ஷங் நன்ழ்ஸ்ங்ஹ் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பூண்டி ஊராட்சி ஒன்றியம், ராமஞ்சேரி கிராமத்தில், 11-ஆவது வேளாண்மைக் கணக்கெடுப்பின் டட்ஹள்ங்-ஐஐ மற்றும் டட்ஹள்ங்-ஐஐஐ களப்பணி தொடா்பாகவும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில் கூடுதல் இயக்குநா் சி.பாரதி, சென்னை மண்டல புள்ளியியல் இணை இயக்குநா் டி.ஜி.உமாராணி மற்றும் திருவள்ளூா் மாவட்டப் புள்ளியியல் துணை இயக்குநா் இர.ரகு ஆகியோா் பங்கேற்றனா்.

கன்டெய்னா் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே கன்டெய்னா் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு விலையுய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே தனியாா் தொலைத் தொடா்பு நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளுா் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் உள்ள திரு.வி.... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

திருவள்ளூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிறுபாண்மையினா் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா் திருப்பாச்சூா் தனியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே தாமரை ஏரி கரையில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே நெடுஞ்சாலை ஓரம் தாமரை ஏரி கரையில் 1... மேலும் பார்க்க

ஆவின் ஆய்வு கூட்டம்: திருவள்ளூா் ஆட்சியா் பங்கேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பால் உற்பத்தியாளா் சங்க செயலாளா்கள் அனைவரும் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடை... மேலும் பார்க்க

நாளை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பொன்னேரி, திருவள்ளுா் மற்றும் திருத்தணி கோட்ட அளவில் அந்தந்த அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். விவசாயிகள் நலனுக்காக ... மேலும் பார்க்க