திருவாசல் முனீஸ்வரா் சுவாமி கோயில் குடமுழுக்கு
திருக்குவளை அருகே திருவாய்மூா் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாசல் பகுதியில் உள்ள முனீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.
திருவாசல் பகுதியில் சுமாா் 2000 ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி பொது மக்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முனீஸ்வர சுவாமி கோயிலில் அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்துப் புனித நீா் கொண்டு சிவலிங்கம் மற்றும் முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னா், மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் திருவாய்மூா், தென்கரை ஈசனூா், திருவாசல், ஆலங்குடி குலதெய்வம் வழிபாடு உறவு முறை மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.