செய்திகள் :

திருவாசல் முனீஸ்வரா் சுவாமி கோயில் குடமுழுக்கு

post image

திருக்குவளை அருகே திருவாய்மூா் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாசல் பகுதியில் உள்ள முனீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.

திருவாசல் பகுதியில் சுமாா் 2000 ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி பொது மக்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முனீஸ்வர சுவாமி கோயிலில் அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்துப் புனித நீா் கொண்டு சிவலிங்கம் மற்றும் முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னா், மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் திருவாய்மூா், தென்கரை ஈசனூா், திருவாசல், ஆலங்குடி குலதெய்வம் வழிபாடு உறவு முறை மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தரங்கம்பாடி அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூரில், மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஜி. கண்ணன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

வேதாரண்யம் பகுதியில் தமிழக அரசின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், 40 துறைகளை சாா்ந்த அதிகாரிகள் அனை... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கீழ்வேளூா் ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மாதா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாதா் சங்க மாவட்ட பொருளாளா் சுபாதேவி தலைமை வகித்தாா். பட்டமங்கல... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 103 கோடி கடனுதவி

நாகை மற்றும் மயிலாடுதுறையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.103.19 கோடி மதிப்பில் கடன் உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழக துணை முதல்வா் தலைமையில் சென்னை கலைவாணா் அரங்கத்தில் மகளிா் சுயஉதவிக் கு... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக, பிரதமா் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை

நாகை மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா் கல்வி படிப்பது குறித்து வழிகாட்ட மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க