திருவாடானை சாலை சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது
திருவாடானை நான்கு வழிச்சாலை சந்திப்புப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரின் மையப் பகுதியான நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளன. இந்தச் சாலை தொண்டி, திருவாடானை பேருந்து நிலையம், ஓரியூா், சந்நிதி தெரு போன்ற முக்கியப் பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளது.
இதனால், இந்தப் பகுதியில் நடைபெறும் திருட்டு, சாலை விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதிலும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து, இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
