செய்திகள் :

திருவாடானையில் கலையரங்கம் திறப்பு விழா

post image

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அருகே சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்

சினேக வல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி, ஆனி மாதங்களில் தேரோட்டத் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்காக கோயில் முன்பாக கலையரங்கம் கட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சத்தில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. இந்த நிலையில், கலையரங்கத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்று திறந்து வைத்தாா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் ஆரோக்கியமேரி சாராள், கணேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா், திமுக ஒன்றியச் செயலா் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணி, நகா் காங்கிரஸ் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க