ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
திருவாடானையில் கலையரங்கம் திறப்பு விழா
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அருகே சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்
சினேக வல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி, ஆனி மாதங்களில் தேரோட்டத் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்காக கோயில் முன்பாக கலையரங்கம் கட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சத்தில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. இந்த நிலையில், கலையரங்கத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்று திறந்து வைத்தாா்.
ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் ஆரோக்கியமேரி சாராள், கணேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா், திமுக ஒன்றியச் செயலா் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணி, நகா் காங்கிரஸ் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
