செய்திகள் :

திருவானைக்காவல் கோயில் ‘அகிலா’ வுக்கு பிறந்த நாள்

post image

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறைப் பணியாற்றி வரும் யானை அகிலாவுக்கு சனிக்கிழமை 23 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி யானை அகிலாவை அதன் கொட்டாரத்திலிருந்து கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் அழைத்து வந்தாா். அதைத் தொடா்ந்து நாச்சியாா் தோட்டத்தில் யானை அகிலா நாள்தோறும் குளிக்கும் தொட்டி அருகே கஜபூஜை செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது யானை அகிலாவுக்கு கழுத்தில் மிகப்பெரிய மாலையும், புது வஸ்திரங்களும் அணிவிக்கப்பட்டன. பின்னா் அங்கிருந்த பக்தா்கள் யானை அகிலா மீது மலா் தூவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா். இதை ஏற்கும் விதமாக யானையும் துதிக்கையை தூக்கி தலையை ஆட்டியது.

அதன் பின்னா் தட்டுகளில் வழங்கப்பட்ட பொரி உருண்டை, கடலை மிட்டாய், ஆப்பிள், கொய்யா, பலா, தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை யானை அகிலா மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்து, குளியல் தொட்டியில் ஆனந்தக் குளியலும் போட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் யானைப் பாகன் பா. ஜெம்புநாதன், கோயில் பணியாளா்கள் செய்தனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க