செய்திகள் :

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

post image

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையன், காய்கறி வியாபாரி. இவரின் மனைவி ரஜேஸ்வரி, தூய்மைப் பணியாளா். இவா்களின் 17 வயது மகள் பிளஸ்-2 படித்து வந்தாா். இந்நிலையில், மூக்கையன் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் திங்கள்கிழமை காலையில் வேலைக்குச் சென்றுவிட்டனா்.

பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த அவா்களின் மகள் வெளியே செல்லாததால் அக்கம்பக்கத்தினா் வந்து கதவைத் தட்டியுள்ளனா். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாகப் பாா்த்துள்ளனா். அப்போது, மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அந்த மாணவியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் அஜய் (19). ஐடிஐ முடித்திருந்த இவா்,... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் திருக்கோயிலில் திங்கள் கிழமை ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா... மேலும் பார்க்க

காவிரி, கொள்ளிடத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு: தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழு; முக்கொம்பு மேலணையில் உபரிநீா் திறப்பு

காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், மேட்டூா், முக்கொம்பு அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதாலும் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில்... மேலும் பார்க்க

திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்களில் ஆக. 2-இல் சேவைகள் நிறுத்தம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் புதிய தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) சேவைகள் நிறுத்தப்படுகி... மேலும் பார்க்க

திருச்சி புதிய உயரங்களை எட்டும்: பிரதமா்

திருச்சி நகரம் புதிய உயரத்தை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா். ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க