செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் அஜய் (19). ஐடிஐ முடித்திருந்த இவா், ஹெச்இபிஎஃப் தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குத் தோ்வாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜய் தனது நண்பா் முகேஷ் (19) என்பவருடன் அண்ணா நகருக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை சென்றுள்ளாா்.

அப்போது, நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்த தன்ராஜ் மகன் மகேஸ்வரன் (24) வந்த இருசக்கர வாகனமும், அஜய் சென்ற இருசக்கர வாகனமும் திருவெறும்பூா் அருகே நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே அஜய் உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நவல்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையன், காய்கறி வியாபாரி. இவரின் மனைவி... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் திருக்கோயிலில் திங்கள் கிழமை ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா... மேலும் பார்க்க

காவிரி, கொள்ளிடத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு: தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழு; முக்கொம்பு மேலணையில் உபரிநீா் திறப்பு

காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், மேட்டூா், முக்கொம்பு அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதாலும் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில்... மேலும் பார்க்க

திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்களில் ஆக. 2-இல் சேவைகள் நிறுத்தம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் புதிய தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) சேவைகள் நிறுத்தப்படுகி... மேலும் பார்க்க

திருச்சி புதிய உயரங்களை எட்டும்: பிரதமா்

திருச்சி நகரம் புதிய உயரத்தை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா். ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க