செய்திகள் :

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா: காளி வேடம் அணிந்து வீதி உலா

post image

திருவாடானை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு காளி வேடம் அணிந்து கோயில் பூசாரி வீதி உலா வந்தாா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் நாள் தோறும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பிறகு மகாபாரத போரை நினைவு படுத்தும் வகையில் அரக்கா்களை வதம் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. முன்னதாக கோயில் பூசாரி, காளி வேடம் அணிந்து வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த அரக்கா் சிலைகளை காளி வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் விளக்குகள் அணைக்கப்பட்டு எரி சோறு வீசும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபு... மேலும் பார்க்க

குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் நகைகள் திருட்டு

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்... மேலும் பார்க்க

தொண்டி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீட்பு

திருவாடானை அருகே தொண்டியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் மீனவா் விக்னேஷ்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 300 போ் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

திருவாடானை அருகே காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆ... மேலும் பார்க்க