செய்திகள் :

தில்லி - என்சிஆரில் இஓஎல் வாகனங்களுக்கான எரிபொருள் தடைக்கான காலக்கெடு நீட்டிப்பு

post image

தில்லி-என்சிஆரில் உள்ள பயன்படுத்தத் தகுதியற்ற (இஓஎல்) வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க

தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பா் 1-ஆம் தேதிவரை காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) நீட்டித்துள்ளது.

தில்லி அரசு, இந்த உத்தரவை செயல்படுத்துவதில் தொழில்நுட்பம், செயல்பாட்டு சவால்கள் குறித்து எழுப்பிய கவலைகளைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆணையத்தின் 24ஆவது கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சட்டபூா்வ உத்தரவு எண். 89-இன் திருத்தப்பட்ட பிரிவின்படி, நவம்பா் 1, 2025 முதல் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியின் ஐந்து அதிக வாகன அடா்த்தி கொண்ட மாவட்டங்களான குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத், கௌதம் புத் நகா் மற்றும் சோனிபட் ஆகிய இடங்களில் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ஏஎன்பிஆா்) அமைப்புமுறைகள் அல்லது பிற வழிமுறைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட இஓஎல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கப்படும்.

என்சிஆரின் மீதமுள்ள பகுதிகளில் இந்த உத்தரவு ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என சிஏக்யூஎம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3 மற்றும் ஜூலை 7ஆம் தேதியிட்ட கடிதத் தொடா்புகளில், அண்டை மாநில தரவுத்தளங்களுடன் ஏஎன்பிஆா் அமைப்பின் முழுமையற்ற ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப குறைபாடுகள் மற்றும் அமலாக்க சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தில்லி குறிப்பிட்டுள்ளது.

மோட்டாா் வாகனச் சட்டம், 1988இன் கீழ் புவியியல் முரண்பாடு குறித்த சட்டபூா்வ கவலைகளையும் அரசு எழுப்பியது. மேலும், வாகன உரிமையாளா்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களையும் அரசு எடுத்துரைத்திருந்தது.

சிஏக்யூஎம் இந்தக் கவலைகளை ஒப்புக்கொண்டது. மேலும், குறைபாடுகளை தடுக்க சீரான அமலாக்க காலக்கெடுவின் அவசியத்தை வலியுறுத்தியது. தகவல்தொடா்புகள் அமைப்புக்கும் அண்டை மாநிலங்களின் வாகன தரவுத்தளங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாததை எடுத்துக்காட்டின.

இஓஎல் வாகனங்கள், அதன் பதிவு நீக்கப்பட்டவுடன் தில்லிஎன்சிஆரில் சாலைப் பயன்பாட்டிற்கு சட்டவிரோதமானதாகும். அடையாளம் காணப்பட்டால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு நினைவூட்டப்பட்டது.

தில்லி மற்றும் என்சிஆா் மாநிலங்களின் போக்குவரத்துத் துறைகள் ஏஎன்பிஆா் அமைப்புமுறை சோதனைகளை விரைவுபடுத்தவும், பணியாளா் பயிற்சியை உறுதி செய்யவும், எரிபொருள் நிலைய ஆபரேட்டா்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணா்வு பிரசாரங்களைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இஓஎஸ் வாகன அகற்றுதல் குறித்த முன்னேற்றத்தை நிறுவனங்கள் மாதந்தோறும் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இந்தத் திருத்தங்களை செயல்படுத்தல் இடைவெளிகளைத் தீா்க்க கூடுதல் நேரத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சிஏக்யூஎம்இன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாக உள்ளது.

காவல் ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்து பெண்களுடன் உறவு: விமான நிலையத்தில் பிடிபட்ட இளைஞர்!

போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமன ஆவணங்களைப் பயன்படுத்தி தில்லி காவல்துறை துணை ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 23 வயது இளைஞா் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) கைது செய்யப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

கலால் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவாலின் மனு மீது அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவு

தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை உறுதிசெய்த அமா்வு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அர... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் விசிக ரிட் மனு தாக்கல்

பிகாரில் வாக்காளா் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: திருநங்கைகள் உள்பட 7 போ் கைது

புது தில்லி, ஜூலை 9 இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக ஐந்து திருநங்கைகள் உட்பட ஏழு வங்கதேசத்தினா் தலைநகரில் தில்லி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பகல் நேரத்தில் பிச்சை எடுப... மேலும் பார்க்க

உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கருவியை பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க