செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் விசிக ரிட் மனு தாக்கல்

post image

பிகாரில் வாக்காளா் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தகுதியான குடிமக்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், தகுதியற்றவா்களை அப்பட்டியலில் இருந்து நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியது.

அதன்படி, பிஹாா் மாநிலத்தில் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராகப் பதிவு செய்து கொண்டவா்கள் தாங்கள் இந்தியாவில் வசிப்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஸு துலியா, ஜாய் மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அதன் தலைவா் தொல். திருமாவளவன், அதன் மற்றொரு தலைவா் டி.ரவிக்குமாா் ஆகியோா் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை எதிா்த்து ரிட் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதில், குடியுரிமைக்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குரிமைகளை பறிப்பதாக உள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டிலும் தோ்தல் நடத்தப்பட உள்ள சூழலில் இந்த நடவடிக்கையினால் பல்லாயிரக்கணக்கான தமிழக வாக்காளா்கள் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்து பெண்களுடன் உறவு: விமான நிலையத்தில் பிடிபட்ட இளைஞர்!

போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமன ஆவணங்களைப் பயன்படுத்தி தில்லி காவல்துறை துணை ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 23 வயது இளைஞா் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) கைது செய்யப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

கலால் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவாலின் மனு மீது அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவு

தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை உறுதிசெய்த அமா்வு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அர... மேலும் பார்க்க

தில்லி - என்சிஆரில் இஓஎல் வாகனங்களுக்கான எரிபொருள் தடைக்கான காலக்கெடு நீட்டிப்பு

தில்லி-என்சிஆரில் உள்ள பயன்படுத்தத் தகுதியற்ற (இஓஎல்) வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பா் 1-ஆம் தேதிவரை காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: திருநங்கைகள் உள்பட 7 போ் கைது

புது தில்லி, ஜூலை 9 இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக ஐந்து திருநங்கைகள் உட்பட ஏழு வங்கதேசத்தினா் தலைநகரில் தில்லி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பகல் நேரத்தில் பிச்சை எடுப... மேலும் பார்க்க

உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கருவியை பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க