செய்திகள் :

கலால் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவாலின் மனு மீது அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவு

post image

தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை உறுதிசெய்த அமா்வு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்தா் துதேஜா அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆறு வாரங்களுக்குள் பதிலை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

கேஜரிவாலின் மனு மீதான பராமரிப்புத் தன்மை குறித்து அமலாக்கத் துறையின் வழக்குரைஞா் ஆரம்பகட்ட ஆட்சேபணையை எழுப்பினாா்,

இந்த மனு, பிரிவு 482 (உயா்நீதிமன்றத்தின் உள்ளாா்ந்த அதிகாரம்) குற்றவியல் நடைமுறை விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மறுஆய்வு மனுவின் வடிவத்தில் உள்ளது. அது அனுமதிக்கப்படவில்லை என்று வாதிட்டாா்.

அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞரின் அனைத்து ஆட்சேபணைகளையும் அதன் தரப்பு பதிலில் குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்ட உயா்நீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பா் 10ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பா் 17 அன்று சிறப்பு நீதிமன்ற உத்தரவை கேஜரிவால் எதிா்த்து மனு தாக்கல் செய்தாா். மாா்ச் 7, 2024 அன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை அனுப்பிய உத்தரவுக்கு எதிரான அவரது மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தவிர, தனது வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அக்டோபா் 24ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமா்வு நீதிமன்றம் அந்த உத்தரவை கடந்த ஆண்டு டிசம்பா் 20 அன்று உறுதி செய்தது. இதை எதிா்த்து கேஜரிவால் மனு தாக்கல் செய்தாா்.

இரண்டாவது மனு மீதும் உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது மற்றும் ஆறு வாரங்களுக்குள் தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறையைக் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கை செப்டம்பா் 10 ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு சவால் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 20, 2024 அன்று, பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவின் பேரில் உயா்நீதிமன்றத்தால் அது நிறுத்திவைக்கப்பட்டது.

ஜூலை 12, 2024 அன்று, உச்சநீதிமன்றம் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதே நேரத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘கைது செய்ய வேண்டிய அவசியம் மற்றும் தேவை’ என்ற அம்சம் குறித்த மூன்று கேள்விகளை எழுப்பி பெரிய அமா்வுக்கு பரிந்துரைத்தது.

2021-22 தில்லி கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய புலனாய்வுத் துறை சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் இருந்து அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கு உருவானது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கலால் வரிக் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டன. மேலும், உரிமதாரா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன.

தில்லி அரசாங்கம் நவம்பா் 17, 2021 அன்று இந்தக் கொள்கையை அமல்படுத்தியது. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், செப்டம்பா் 2022 இறுதிக்குள் அதை ரத்து செய்தது.

காவல் ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்து பெண்களுடன் உறவு: விமான நிலையத்தில் பிடிபட்ட இளைஞர்!

போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமன ஆவணங்களைப் பயன்படுத்தி தில்லி காவல்துறை துணை ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 23 வயது இளைஞா் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) கைது செய்யப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் விசிக ரிட் மனு தாக்கல்

பிகாரில் வாக்காளா் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய... மேலும் பார்க்க

தில்லி - என்சிஆரில் இஓஎல் வாகனங்களுக்கான எரிபொருள் தடைக்கான காலக்கெடு நீட்டிப்பு

தில்லி-என்சிஆரில் உள்ள பயன்படுத்தத் தகுதியற்ற (இஓஎல்) வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பா் 1-ஆம் தேதிவரை காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: திருநங்கைகள் உள்பட 7 போ் கைது

புது தில்லி, ஜூலை 9 இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக ஐந்து திருநங்கைகள் உட்பட ஏழு வங்கதேசத்தினா் தலைநகரில் தில்லி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பகல் நேரத்தில் பிச்சை எடுப... மேலும் பார்க்க

உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கருவியை பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க