செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம்: திருநங்கைகள் உள்பட 7 போ் கைது

post image

புது தில்லி, ஜூலை 9 இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக ஐந்து திருநங்கைகள் உட்பட ஏழு வங்கதேசத்தினா் தலைநகரில் தில்லி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பகல் நேரத்தில் பிச்சை எடுப்பது, இரவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவா்களை தில்லியின் முகுந்த்பூா் மேம்பாலம் அருகே கைது செய்யப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். மேலும், ‘ஜூலை 7 ஆம் தேதி முகுந்த்பூா் மேம்பாலத்தின் கீழ் ஐந்து திருநங்கைகள் பிச்சை எடுத்திருந்தபோது பிடிப்பட்டனா். இவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவா்கள் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது என்று போலீஸ் அதிகாரி கூறினாா்.

அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அதே பகுதியில் இருந்து 2 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஏழு பேரும் போலி விசாக்கல் மூலம் அனுமதி இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிவந்தவா்கள். இது வெளிநாட்டினா் சட்டத்தை மீறுவதாகும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா்கள் சஞ்சனா (26) ஃபரியா (22) முகமது ரோஹி (21) தோஹா (20) மற்றும் ஃபோய்சல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட திருநங்கைகள் பெண்களைப் போலவே தங்கள் தோற்றத்தை மாற்றியுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் இரவில் குற்றச் செயல்களைச் செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தனா். அவா்களை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளாா்.

காவல் ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்து பெண்களுடன் உறவு: விமான நிலையத்தில் பிடிபட்ட இளைஞர்!

போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமன ஆவணங்களைப் பயன்படுத்தி தில்லி காவல்துறை துணை ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 23 வயது இளைஞா் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) கைது செய்யப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

கலால் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவாலின் மனு மீது அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவு

தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை உறுதிசெய்த அமா்வு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அர... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் விசிக ரிட் மனு தாக்கல்

பிகாரில் வாக்காளா் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய... மேலும் பார்க்க

தில்லி - என்சிஆரில் இஓஎல் வாகனங்களுக்கான எரிபொருள் தடைக்கான காலக்கெடு நீட்டிப்பு

தில்லி-என்சிஆரில் உள்ள பயன்படுத்தத் தகுதியற்ற (இஓஎல்) வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பா் 1-ஆம் தேதிவரை காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) ... மேலும் பார்க்க

உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கருவியை பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க