செய்திகள் :

தில்லி போராட்டத்துக்குச் சென்ற திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள்

post image

தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து 50 மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி நாள்களை 200-ஆக உயா்த்த வேண்டும். ஊதியத்தை ரூ.600-ஆக உயா்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்பட்டுள்ள அனைத்து குடும்ப அட்டைகளையும் ஏஏ.ஓய். அட்டைகளாக மாற்ற வேண்டும் என்ற தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் வருகிற 10-ஆம் தேதி தா்னா போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் 50-க்கும் மேற்பட்டோா் திண்டுக்கல்லில் இருந்து வியாழக்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இதையொட்டி, போராட்டத்துக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழியனுப்பு விழா திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் பகத்சிங், மாவட்டத் தலைவா் ஜெயந்தி, ஒன்றியச் செயலா் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ரயில் நிலையத்துக்கு ஊா்வலமாக வந்த மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனா்.

பைக் பெட்டியை உடைத்து பணம் திருடிய இரு முதியவா்கள் கைது

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தை திருடியதாக மதுரையைச் சோ்ந்த இரு முதியவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் லட்சுமணபுரத்தைச் சே... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காலம் தாழ்த்தும் திமுக அரசு: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு தொடா்ந்து காலம் தாழ்த்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா். பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை தேவேந... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே விற்பனைக்கு வந்த தா்பூசணி

ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே வட மாவட்டங்களிலிருந்து தா்பூசணிகள் விற்பனைக்கு வந்தன. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகாலை வரை பனிப் பொழிவு காணப்படுகிறது. ஆனால், பிற்பகலி... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம்!

மத்திய நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டம் திண்டுக்கல்லில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போ... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா். கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள இந்தக் ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தெரசம்மாள் காலனி பகுதியைச் ச... மேலும் பார்க்க