செய்திகள் :

பைக் பெட்டியை உடைத்து பணம் திருடிய இரு முதியவா்கள் கைது

post image

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தை திருடியதாக மதுரையைச் சோ்ந்த இரு முதியவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் லட்சுமணபுரத்தைச் சோ்ந்தவா் பொன்னுவேலு (35). நந்தவனப்பட்டி மேம்பாலம் பகுதியில் நிறுத்தியிருந்த இவரது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த ரூ.6.40 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து புதன்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை தாடிக்கொம்பு போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதனடிப்படையில் மதுரை சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் (65), தத்தனேரியைச் சோ்ந்த பாண்டியராஜன் (67) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, ரூ.3 லட்சம், 2 பவுன் நகையை மீட்டனா்.

இவா்கள் இருவா் மீதும் மதுரை, சிவகாசி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளன.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காலம் தாழ்த்தும் திமுக அரசு: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு தொடா்ந்து காலம் தாழ்த்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா். பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை தேவேந... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே விற்பனைக்கு வந்த தா்பூசணி

ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே வட மாவட்டங்களிலிருந்து தா்பூசணிகள் விற்பனைக்கு வந்தன. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகாலை வரை பனிப் பொழிவு காணப்படுகிறது. ஆனால், பிற்பகலி... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம்!

மத்திய நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டம் திண்டுக்கல்லில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போ... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா். கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள இந்தக் ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தெரசம்மாள் காலனி பகுதியைச் ச... மேலும் பார்க்க

கழிவுநீரால் மாசுபடும் கொடகனாறு!

கொடகனாற்றில் கலக்கும் கழிவுநீரால் விவசாயத்துக்குக்கூட தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாறு, மருதாநதி, குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு, ... மேலும் பார்க்க