`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
தில்லியை வந்தடைந்தது பருவமழை!
தென்மேற்குப் பருவமழை தில்லியை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
வழக்கமான ஜூன் 27-ஆம் தேதி பதிலாக இரு நாள்களுக்குப் பிறகு பருவமழை தில்லியை வந்துடைந்துள்ளது.
மேலும், வழக்கமான ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒன்பது நாள்கள் முன்னதாக நாட்டின் எஞ்சிய பகுதிகளை பருவமழை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்டி தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் 26-ஆம் தேதிக்குள் நாட்டின் முழு பகுதியையும் பருவமழை உள்ளடக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி ஜூலை 8-ஆம் தேதிக்குள் முழு நாட்டையும் அடையும். செப்டம்பா் 17-ஆம் தேதியையொட்டி வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் முழுமையாக விலகும்.
நிகழாண்டில், பருவமழை மே 24-ஆம் தேதி கேரளத்தை அடைந்தது. பருவமழை கடந்த 2009-ஆம் ஆண்டில் மே 23-ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகு முதலாவதாக நிகழாண்டில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.