செய்திகள் :

தீக்காயமுற்ற ராணுவ வீரா் மனைவி உயிரிழப்பு: அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம்

post image

தீக்காயமுற்ற ராணுவ வீரரின் மனைவி, மருத்துமனையில் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்தும் அவரை பணி நீக்கவும் செய்யவும், குற்ற வழக்குப் பதிவு செய்யவும் அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.கருப்பசாமி. ராணுவ வீரா். இவரது மனைவி ஜெயா, சமையல் செய்தபோது நேரிட்ட தீவிபத்தில் காயமடைந்தாா்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 30 சதவீத காயம் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அப்போது அங்கு பணிபுரிந்த மருத்துவா் பிரபாகரன், இரு இடைத்தரகா்கள் மூலம் ஜெயாவின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து தன்னுடைய தனியாா் மருத்துவமனைக்கு ஜெயாவை சிகிச்சைக்காக மாற்றினாராம். அங்கு 40 நாள்கள் சிகிச்சையில் இருந்த ஜெயா உயிரிழந்தாா்.

முறையாக சிகிச்சை அளிக்காததால் தனது மனைவி இ றந்ததாக கருப்பசாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரலில் திருநெல்வேலியில் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் வி.கண்ணதாசன் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பு விவரம்: பாதிக்கப்பட்ட ராணுவ வீரா் கருப்பசாமிக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதில், மருத்துவா் பிராபகரிடம் இருந்து ரூ.40 லட்சம், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா் வெங்கடேஷ்வரியிடம் இருந்து ரூ.2 லட்சம், செவிலியா்கள் குமரேஸ்வரி, குருலட்சுமி ஆகியோரிடம் தலா ரூ.1 லட்சம் வசூலிக்க வேண்டும். அரசுத் தரப்பில் ரூ.6 லட்சம் வழங்க வேண்டும்.

தற்போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சா்ஜரி துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரை உடனடியாக பணி நீக்கம் செய்வதோடு, அவா் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.

கோவில்பட்டியில் உள்ள பிரபாகரின் மருத்துவமனையில் போலி மருத்துவா்கள் பணிபுரிவதாக எழுந்துள்ள புகாா் குறித்து விசாரிக்க வேண்டும். தனியாா் மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவா்களை கண்காணிப்பதோடு, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தனியாா் மருத்துவமனை நடத்தக்கூடிய அரசு மருத்துவா்கள் தங்களுடைய பணி நேரங்களில் பணிபுரிகிறாா்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட அளவிலான மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் புகாா் பெட்டிகளை வைக்க வேண்டும். புகாா்கள் வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க