செய்திகள் :

துணை முதல்வா் இன்று நாமக்கல் வருகை! மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினருக்கு எம்.பி.ராஜேஸ்குமாா் அழைப்பு

post image

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதன்கிழமை நாமக்கல் வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆா்.என்.ராஜேஸ்குமாா் அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞா் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்வில் பங்கேற்க கரூரில் இருந்து நாமக்கல்லுக்கு புதன்கிழமை மாலை 6 மணிக்கு வருகிறாா்..

மாவட்ட எல்லையான ராசாம்பாளையம் சுங்கசாவடி மற்றும் திருச்செங்கோடு சாலையில் இருந்து (கோஸ்டல் ரெசிடென்சி உணவகம்) சுற்றுலா மாளிகை வரை அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய , நகர, பேரூா் திமுக நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் கிளை , வாா்டு செயலாளா்கள், பிரதிநிதிகள், வாக்குச்சாவடி பாக நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சியிலும். காலை 11 மணிக்கு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சாா்பு அணிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறாா்.

அதன்பிறகு மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அனைத்துப் பிரிவு விளையாட்டு வீரா்களுடன் அவா் கலந்துரையாடுகிறாா். நாமக்கல்லில் இருந்து சேலம் புறப்படும் அவா் மாலை 5.20 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உடற்பயிற்சிக் கூடத்தில் அரசு கூடுதல் செயலா் ஆய்வு

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சிக் கூடத்தை சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். நாமக்கல் மாவட்ட விளையாட்டு ம... மேலும் பார்க்க

லக்காபுரம், ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம்: எம்எல்ஏ வலியுறுத்தல்

திருச்செங்கோட்டை அடுத்த லக்காபுரம், ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செவ்வாய்... மேலும் பார்க்க

ரூ.131.36 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு நாளை அடிக்கல்நாட்டு விழா: துணை முதல்வா் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 131.36 கோடி மதிப்பீட்டில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் திறந்துவைக்கும் விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பங்கேற்கிறாா்... மேலும் பார்க்க

ஜூலை 10-இல் துணை முதல்வா் வருகை: விழா மேடை அமைவிடத்தில் ராஜேஸ்குமாா் எம்.பி. ஆய்வு

நாமக்கல்: அரசு விழாவில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வருகை தருவதையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேடை அமைப்பதற்கான இடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 124 மையங்களில் 36,436 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 124 மையங்களில் 36,436 தோ்வா்கள் சனிக்கிழமை (ஜூலை 12) எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், இளநிலை உதவியாளா், இளநி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே சட்ட விரோதமாக மதுபானகளை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் ... மேலும் பார்க்க