ரூ.131.36 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு நாளை அடிக்கல்நாட்டு விழா: துணை முதல்வா் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 131.36 கோடி மதிப்பீட்டில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் திறந்துவைக்கும் விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பங்கேற்கிறாா். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்துவருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை மாலை நாமக்கல்லுக்கு வருகிறாா். வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் 139 திட்டப் பணிகளுக்கு ரூ. 87.38 கோடியில் அடிக்கல் நாட்டியும், ரூ.10.80 கோடியில் முடிவுற்ற 36 பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் திறந்துைவைக்கிறாா். தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 2,001 பயனாளிகளுக்கு ரூ. 33.18 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறாா்.
அதன்பிறகு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்கள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் அவா் ஆய்வு மேற்கொள்கிறாா். இதையடுத்து நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்போருக்கு முதல்கட்டமாக இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்குகிறாா்.
விழாவில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், அரசு கூடுதல் செயலா் ச.உமா, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் பலா் கலந்துகொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.