சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
துணைநிலை ஆளுநரின் தேநீா் விருந்தைப் புறக்கணித்த கட்சிகள்
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை மாலை அளித்த தேநீா் விருந்தை சட்டப்பேரவையில் உள்ள திமுகவும், சட்டப்பேரவைக்கு வெளியேயுள்ள அரசியல் கட்சிகள் சிலவும் புறக்கணித்தன.
திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனா்.
மேலும், சட்டப்பேரவைக்கு வெளியே உள்ள அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன.
புதுவை காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, எம்.எல்.ஏ எம்.வைத்தியநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.
முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், ஏ.ஜான்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் பி.எம்.எல். கல்யாணசுந்தரம், நியமன எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், ஆா். பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, உ. லட்சுமிகாந்தன், சுயேச்சை எம்.எல்.ஏ. எம்.சிவசங்கா், தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி, புதுவை பல்கலைக் கழக துணைவேந்தா் பேராசிரியா் பி.பிரகாஷ்பாபு, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பத்மஸ்ரீ விருது பெற்ற தட்சிணாமூா்த்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.