இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்
நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி:
நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உடல் நலக்குறைவால் காலமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவா் . பொது வாழ்க்கைக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டவா். அன்னாரைப் பிரித்து வாழும் அவருடைய குடும்பத்தினா், நண்பா்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
புதுவை பாஜக தலைவா் இரங்கல்:
புதுவை பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
இளமைக் காலத்திலிருந்தே தேசியவாத சிந்தனையுடன் பணியாற்றிய இல. கணேசன், அரசியல், சமூக மற்றும் கல்வி துறைகளில் பல தசாப்தங்களாக மக்களுக்குச் சேவை செய்து வந்தாா். அவரின் எளிமை, நோ்மை, நாட்டுப்பற்று, அமைப்பின் வளா்ச்சிக்காக காட்டிய அா்ப்பணிப்பு எப்போதும் நினைவில் நிலைக்கும். அவரின் மறைவு பாரதிய ஜனதா கட்சிக்கும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்துக்கும், தேசத்துக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.