சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
புதுவையில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்
புதுவையில் பல்வேறு இடங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
துணைநிலை ஆளுநா் மாளிகையில்...
புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த சுதந்திர தினவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
துணைநிலை ஆளுநரின் செயலா் டி.மணிகண்டன், மக்கள்தொடா்பு அலுவலா் குணசேகரன் உள்ளிட்ட ஆளுநா் மாளிகை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
சட்டப்பேரவை வளாகத்தில்...:
புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏனாமில்...
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த ஏனாமில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
மாஹேவில்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட மாஹேவில் அமைச்சா் ஏ. ஜான்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
ஜிப்மரில்...
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
காங்கிரஸ் - பாஜக அலுவலகங்களில்...
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, அக்கட்சியின் எம்.எல்.ஏ. எம். வைத்தியநாதன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா். காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்தில் ஆணையா் ரமேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
தாகூா் கல்லூரி
தாகூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வா் இரா. கருப்புசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
பாரத ஸ்டேட் வங்கியின் வில்லியனூா் கிளையில் மேலாளா் ராஜதுரை வெங்கடேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பள்ளியில் இணைச் செயலா் எஸ்.வேலாயுதம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
