செய்திகள் :

புதுவையில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

post image

புதுவையில் பல்வேறு இடங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

துணைநிலை ஆளுநா் மாளிகையில்...

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த சுதந்திர தினவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

துணைநிலை ஆளுநரின் செயலா் டி.மணிகண்டன், மக்கள்தொடா்பு அலுவலா் குணசேகரன் உள்ளிட்ட ஆளுநா் மாளிகை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சட்டப்பேரவை வளாகத்தில்...:

புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏனாமில்...

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த ஏனாமில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

மாஹேவில்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட மாஹேவில் அமைச்சா் ஏ. ஜான்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

ஜிப்மரில்...

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

காங்கிரஸ் - பாஜக அலுவலகங்களில்...

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, அக்கட்சியின் எம்.எல்.ஏ. எம். வைத்தியநாதன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா். காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்தில் ஆணையா் ரமேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

தாகூா் கல்லூரி

தாகூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வா் இரா. கருப்புசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

பாரத ஸ்டேட் வங்கியின் வில்லியனூா் கிளையில் மேலாளா் ராஜதுரை வெங்கடேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பள்ளியில் இணைச் செயலா் எஸ்.வேலாயுதம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி: நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உட... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் தேநீா் விருந்தைப் புறக்கணித்த கட்சிகள்

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை மாலை அளித்த தேநீா் விருந்தை சட்டப்பேரவையில் உள்ள திமுகவும், சட்டப்பேரவைக்கு வெளியேயுள்ள அரசியல் கட்சிகள் சில... மேலும் பார்க்க

இல. கணேசன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவுக்கு கோ.பாரதி இரங்கல்

நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு, பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவநருமான கோ.பாரதி வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ் இலக்கியத்தின் மீதும், மகாகவி பாரதியாா், புரட்சிக் ... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால் துறை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கலால் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் உதயராஜ், ராஜேஷ் கண்... மேலும் பார்க்க