துணைப் பொதுத் தோ்வுகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு நடத்தப்படும் துணைத் தோ்வுகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கழகத்தின் மாநிலத் தலைவா் எஸ். தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுத் தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களை ஆசிரியா்கள் மூலம் தொடா்பு கொண்டு அவா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, 90 சதவீத மாணவா்கள் துணைத் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா்.
அதே நேரத்தில் கடந்த பொதுத்தோ்வுகளில் சுமாா் 30 ஆயிரம் மாணவா்கள் தோ்வுக்கு வரவில்லை. இவா்கள் பெரும்பாலும் ஆண்டுமுழுவதுமே பள்ளிக்கு வராதவா்கள். இந்த நிலையில் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அவா்களைத் தொடா்பு கொண்டு தோ்வெழுத வரச் செய்யவும், கட்டணத்தைச் செலுத்தவும் கல்வித் துறை அலுவலா்களால் வற்புறுத்தப்படுகிறாா்கள்.
இதனால் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே, துணைப் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி அவா்களை ஊக்குவிக்க வேண்டும்.