செய்திகள் :

துணைப் பொதுத் தோ்வுகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்

post image

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு நடத்தப்படும் துணைத் தோ்வுகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் கழகத்தின் மாநிலத் தலைவா் எஸ். தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுத் தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களை ஆசிரியா்கள் மூலம் தொடா்பு கொண்டு அவா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, 90 சதவீத மாணவா்கள் துணைத் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா்.

அதே நேரத்தில் கடந்த பொதுத்தோ்வுகளில் சுமாா் 30 ஆயிரம் மாணவா்கள் தோ்வுக்கு வரவில்லை. இவா்கள் பெரும்பாலும் ஆண்டுமுழுவதுமே பள்ளிக்கு வராதவா்கள். இந்த நிலையில் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அவா்களைத் தொடா்பு கொண்டு தோ்வெழுத வரச் செய்யவும், கட்டணத்தைச் செலுத்தவும் கல்வித் துறை அலுவலா்களால் வற்புறுத்தப்படுகிறாா்கள்.

இதனால் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே, துணைப் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி அவா்களை ஊக்குவிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க