துளசியாபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம் கீழ்வேளூா் அருகேயுள்ள துளசியாபுரம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஜூன் 11- ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் மற்றும் பூா்ணாஹூதி தீபாரதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா மாரியம்மன் மற்றும் காத்தவராயன், பெரியாச்சி, வீரன் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.