செய்திகள் :

தூத்துக்குடி: சென்னை, பெங்களூருக்கு மீண்டும் கூடுதல் விமான சேவை!

post image

தூத்துக்குடியிலிருந்து சென்னை, பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் (மாா்ச் 30) மீண்டும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக, விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி-சென்னை இடையே 8, தூத்துக்குடி - பெங்களூரு இடையே 2 என நாள்தோறும் மொத்தம் 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பண்டிகை நாள்கள் மட்டுமன்றி பிற நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு சென்னை விமான நிலைய நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் (மாா்ச் 30) கூடுதலாக 6 விமான சேவைகளும், பெங்களூருக்கு கூடுதலாக 2 விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதில், சென்னை-தூத்துக்குடி இடையே 14, தூத்துக்குடி- பெங்களூரு 4 என மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்படும் என, தூத்துக்குடி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 மாா்ச் மாதம் கரோனா காலக்கட்டத்தில் குறைக்கப்பட்ட விமான சேவை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க