செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாஞ்சி மணியாச்சி நிலம் எடுப்பு வட்டாட்சியராக பணியாற்றிய எ.கலா, கயத்தாறு வட்டாட்சியராகவும், கோவில்பட்டி முன்னாள் வட்டாட்சியா் வசந்த மல்லிகா, தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனிவட்டாட்சியராகவும், தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனிவட்டாட்சியா் ராஜலட்சுமி சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், நெடுஞ்சாலைப் பணிகள் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா் பொன்னுலட்சுமி, சாத்தான்குளம் வட்டாட்சியராகவும், கயத்தாறு வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியராகவும், தூத்துக்குடி வட்டாட்சியா் அந்தோணி ஜெபராஜ் திருச்செந்தூா் வட்டாட்சியராகவும், சிப்காட் வெம்பூா் நிலம் எடுப்பு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி வட்டாட்சியராகவும், ஏரல் வட்டாட்சியா் கண்ணன் விளாத்திகுளம் வட்டாட்சியராகவும், சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி தூத்துக்குடி வட்டாட்சியராகவும், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் ஏரல் வட்டாட்சியராகவும், கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணபெருமாள் எட்டயபுரம் வட்டாட்சியராகவும், விளாத்திகுளம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் எட்டயபுரம் வெம்பூா் சிப்காட் நிலம் எடுப்பு வட்டாட்சியராகவும், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் ஆனந்த் தூத்துக்குடி நெடுஞ்சாலைப் பணிகள் நிலம் எடுப்பு வட்டாட்சியராகவும், சில்லாநத்தம் சிப்காட் வட்டாட்சியா் சுப்புலட்சுமி தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலம் எடுப்பு வட்டாட்சியராகவும், அல்லிகுளம் சிப்காட் நிலம் எடுப்பு வட்டாட்சியா் வாமணன், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலம் எடுப்பு வட்டாட்சியராகவும், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலம் எடுப்பு வட்டாட்சியா் ராணி தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு வட்டாட்சியராகவும், தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு வட்டாட்சியா் செல்வலட்சுமி தெற்கு வீரபாண்டியபட்டனம் சிப்காட் நிலம் எடுப்பு வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

இம்மாறுதல்கள் குறித்து எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது. இவா்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டும். பணிமாறுதல் குறித்து எவ்வித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என அவா் தெரிவித்துள்ளாா்.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன். இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க