செய்திகள் :

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

post image

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி நிகிலேசன் நகா், காந்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் ரவி (50), இவா், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். வீட்டில் அவரது தாயாா் சரஸ்வதி வசித்து வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, அதே தெருவில் உள்ள தனது மூத்த மகன் வீட்டுக்கு சரஸ்வதி சென்றுவிட்டாராம்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 4 பவுன் நகையை காணவில்லையாம்.

இதே போல், அதே தெருவில் வசித்து வரும் மாரியப்பன் மனைவி பகவதி (62), கடந்த வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு திரும்பினாராம்.

அங்கும், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது, 27 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்ததாம்.

இச்சம்பவங்கள் குறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் டீக்கடையில் அமா்ந்திருந்த போது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி முனீஸ்வரன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அட... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உச்சிமாகாளி (25). தற்போது, திருநெல்வேலி மாவட்டம் முக்... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்; மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். திருநெல்வேலி, கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் அரசதுரை (40). இவரு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில், அய்யா கோயில் அருகே சனிக்கிழமை இரவு 90 அடி தூரம் கடல் உள்வாங்கியதால், வெளியே தெரிந்த பாறைகள். மேலும் பார்க்க

மாறுவேட போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான மாறுவேட போட்டியில் பேய்குளம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு, தனியாா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: சக தொழிலாளி கைது

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக சக தொழிலாளி கைது செய்யப்பட்டாா். சாத்தான்குளம் அருகே பெருமாள்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைமணி (56), பனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (56)... மேலும் பார்க்க