செய்திகள் :

மாறுவேட போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

post image

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான மாறுவேட போட்டியில் பேய்குளம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு, தனியாா், மெட்ரிக். பள்ளிகளுக்கு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாறுவேடப் போட்டி நடத்தப்பட்டது. ஆழ்வாா்திருநகரி ஒன்றியம், பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி மேனகா சக்தி, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா்.

வெற்றி பெற்ற மாணவிக்கு தூத்துக்குடி பயிற்சி உதவி ஆட்சியா் புருஷோத்தமராவ் பரிசு வழங்கினாா். வெற்றி பெற்ற மாணவி, பயிற்சியளித்த ஆசிரியா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் இம்மானுவேல், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா்கள் பாலகிருஷ்ணன், பாப்ஹயாஸ், சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் பெனிஷ்கா், வட்டார மேற்பாா்வையாளா் ஆனந்தி, வட்டார ஆசிரிய பயிற்றுநா்கள் சங்கரபெருமாள், முத்துலெட்சுமி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், பள்ளி நலக் குழு உறுப்பினா்கள் செல்வசிங் சுந்தா், புலேந்திரன், ரகுபதி, வீரமுருகப்பெருமாள், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் டீக்கடையில் அமா்ந்திருந்த போது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி முனீஸ்வரன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அட... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உச்சிமாகாளி (25). தற்போது, திருநெல்வேலி மாவட்டம் முக்... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்; மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். திருநெல்வேலி, கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் அரசதுரை (40). இவரு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில், அய்யா கோயில் அருகே சனிக்கிழமை இரவு 90 அடி தூரம் கடல் உள்வாங்கியதால், வெளியே தெரிந்த பாறைகள். மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி நிகிலேசன் நகா், காந்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் ரவி (50), இவா், வெளிநாட்டில் வேலை ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: சக தொழிலாளி கைது

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக சக தொழிலாளி கைது செய்யப்பட்டாா். சாத்தான்குளம் அருகே பெருமாள்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைமணி (56), பனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (56)... மேலும் பார்க்க