தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் ரூ.1 லட்சம் திருட்டு
தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் கடையை உடைத்து ரொக்கம் ரூ.1.04 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே நடுக்கூட்டுடன் காட்டைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (39). இவா் தனியாா் ஷிப்பிங் நிறுவனத்தில், இயக்க மேலாளராக வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிறுவனம் துறைமுக இறக்குமதியாளா்களிடம் நிலக்கரியை வாங்கி, தமிழகம், கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், துறைமுகத்திலிருந்து நிலக்கரியை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்கான வாடகை பணத்தை ஷிப்பிங் நிறுவன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வைத்துள்ளனா்.
ஷிப்பிங் நிறுவன அலுவலகம் அருகே உள்ள கடைக்காரா் திருமால், புதன்கிழமை காலை தனது கடையை திறக்க வந்தபோது அவரது கடையின் பூட்டு சேதமடைந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பணம் எதுவும் திருடப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், அருகில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தின் ஷட்டா் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, மேலாளா் புஷ்பராஜுக்கு தகவல் தெரிவித்தாா். அவா், அலுவலகத்துக்குள் சென்று பாா்த்தபோது, பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல, அருகில் உள்ள காா்த்திக் என்பவரது கடையையும் உடைத்து அங்கிருந்த ரூ.54 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.