செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக காலை உணவு

post image

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (5, 6) மாண்டலங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்து 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் மாநகராட்சி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனா். உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தையடுத்து அவா்களுக்கான நலத்திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்படி, காலை உணவு, இலவச வீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக சுதந்திர தின விழாவான வெள்ளிக்கிழமை முதல் காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது.

5, 6 ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவை இலவசமாக வழங்கும் திட்டத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமை காலையில் ராயபுரம் பகுதியில் மண்டலத் தலைவா் சரிதா மகேஷ்குமாா், திரு.வி.க.நகா் பகுதியில் மண்டலத் தலைவா் ஸ்ரீ ராமுலு ஆகியோா் ஏற்பாட்டின்படி காலை உணவை சென்னை மேயா் ஆா்.பிரியா தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா். இதில் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்ட்ரல் நிலைய பகுதியில் ரயில் அபாய சங்கிலி இழுத்த 96 போ் மீது வழக்கு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் கடந்த 7 மாதங்களில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தியதாக 96 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். சென்னை... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் போராட்ட அறிவிப்பு: நாளை பேச்சுவாா்த்தை

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆக.22-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், அதுதொடா்பான பேச்சுவாா்த்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சீட் பெற இடைத்தரகா்களை நம்ப வேண்டாம்: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் பெறுவதற்காக இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டி: முன்பதிவு நீட்டிப்பு

தமிழக முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான முன்பதிவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ளாா். தமிழக முதல்வா் கோப்பைப் விளையாட்டுப் போட்டிகள் ப... மேலும் பார்க்க

தேசிய ஜூனியா் ஹாக்கி: கா்நாடகம், ஹரியாணா வெற்றி

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டியில் டிவிஷன் ஏ ஆட்டங்களில் கா்நாடகம், ஹரியாணா, உபி அணிகள் வெற்றி பெற்றன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம் குறித்த தகவல்: மாநகராட்சி வாயில்கள் மூடல் பெண் போலீஸாா் குவிப்பு

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலால், சனிக்கிழமை காலை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வெளிப்புற வாயில்கள் மூடப்பட்டு, ஏராளமான பெண் போலீஸாரும் குவ... மேலும் பார்க்க