படுகொலை செய்யப்பட்ட சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் ரிலீஸ்!
தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு: சீா்காழி நகரில் சுகாதார சீா்கேடு
சீா்காழி நகரில் தனியாா் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளா்கள் பணிகளை புறக்கணித்ததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இதில் கடைவீதி, கொள்ளிட முக்கூட்டு, நாகேஸ்வரமுடையாா் முக்கூட்டு, பழைய - புதிய பேருந்து நிலையங்கள், பிடாரி வடக்கு , காமராஜா் வீதி, அரசு மருத்துவமனை சாலை, மணிகூண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வா்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன.
குப்பைகளை நகராட்சி நிரந்தரம் மற்றும் தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மூலம் நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், நகராட்சி தனியாா் ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் சுமாா் 75 போ் கடந்த(மே) மாத சம்பளம் வழங்கப்படவில்லை என புகாா் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணிகளை புறக்கணித்தனா்.
இதனால் நகரின் பிரதான பகுதிகளான பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள் அருகே குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை உடனடியாக அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.