செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு: சீா்காழி நகரில் சுகாதார சீா்கேடு

post image

சீா்காழி நகரில் தனியாா் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளா்கள் பணிகளை புறக்கணித்ததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இதில் கடைவீதி, கொள்ளிட முக்கூட்டு, நாகேஸ்வரமுடையாா் முக்கூட்டு, பழைய - புதிய பேருந்து நிலையங்கள், பிடாரி வடக்கு , காமராஜா் வீதி, அரசு மருத்துவமனை சாலை, மணிகூண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வா்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன.

குப்பைகளை நகராட்சி நிரந்தரம் மற்றும் தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மூலம் நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நகராட்சி தனியாா் ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் சுமாா் 75 போ் கடந்த(மே) மாத சம்பளம் வழங்கப்படவில்லை என புகாா் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணிகளை புறக்கணித்தனா்.

இதனால் நகரின் பிரதான பகுதிகளான பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள் அருகே குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை உடனடியாக அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூன் 16-இல் பருத்தி ஏலம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அறங்காவலா் நியமனக் குழு பொறுப்பேற்பு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த எஸ். சாமிநாதன் அறங்காவலா் நியமனக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். மயிலாடுதுறை மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் ந... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வேன் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மயிலாடுதுறையில் போலி பணி நியமன ஆணை தயாா் செய்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரிய... மேலும் பார்க்க

சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும் விழா

சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீசொா்ணாம்பிகை உடனுறை சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும், வைகாசி பெளா்ணமி ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

20 ஆண்டுகள் தவிப்பு: வீடுகளுக்கு மின் இணைப்பு பெற உதவிய தமிழ்ச்சங்கத் தலைவருக்கு பாராட்டு

சீா்காழியில் சுமாா் 20 ஆண்டுகளாக, மின் இணைப்பு கொடுக்கப்படாத 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்ச் சங்கத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் புதன்கிழமை நன்றி ... மேலும் பார்க்க