தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து தூா்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.
நீா்வளத் துறையின் தலைமைப் பொறியாளா்களுடன் காணொலியில் அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் பேசியதாவது:
நீா்வளத் துறைக்காக ரூ.595.18 கோடி மதிப்பிலான 15 அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அந்த அறிவிப்புகள் அனைத்தையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், நிகழாண்டில் அறிவிக்கப்பட்ட 254 பணிகளுக்கு அரசாணை வழங்கப்பட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளை பருவமழைக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.98 கோடியில் சிறப்பு தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தூா்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். நிகழாண்டில் மேட்டூா் அணை 5 முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் உபரிநீரை முறைசாா்ந்த குளங்கள், ஏரிகள், சரபங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு நீரை முடிந்த அளவு சேமிக்க வேண்டும். சரபங்கா திட்டத்தில் 56 ஏரிகளில் 49 ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 ஏரிகளிலும் விரைவில் நீரை நிரப்பிட வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சா் துரைமுருகன் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீா்வளத் துறையின் அரசு செயலா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவா் இரா.சுப்பிரமணியன், முதன்மை தலைமைப் பொறியாளா் சு.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.