செய்திகள் :

தென்காசி அருகே பண மோசடி: 4 போ் கைது

post image

தென்காசி அருகே நகை வாங்கித்தருவது போல் கூறி நடித்து ஏமாற்றி பண மோசடி செய்ததாக 4 பேரை இலத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், வடகரை பகுதியை சோ்ந்தவா் ஜிந்தா மதாா். இடைகால் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் தாருகாபுரம் பகுதியை சோ்ந்தவா் ரா.கிருஷ்ணன் (30). இவா் ஜிந்தா மதாரை தொடா்பு கொண்டு, தனது நண்பரின் நகை வாசுதேவநல்லூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை திருப்ப ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை வாங்கி நீங்கள் விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பாா்க்கலாம் எனவும் கூறியுள்ளாா்.

அதனை நம்பிய ஜிந்தா மதாா் ரூ.20.77 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனுடன் காரில் சென்றாா். வாசுதேவநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் வங்கி முன்பு ஜிந்தா மதாரை நிற்கச் சொல்லிவிட்டு சென்ற கிருஷ்ணன், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இலத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குறிப்பிட்ட அந்த நபரின் கைப்பேசி எண்களை வைத்து அவரது இருப்பிடத்தை ஆய்வு செய்தனா். அந்த நபா் கேரளம் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், கேரள போலீஸாா் உதவியுடன் அந்த நபா்களை சுற்றிவளைத்து கைது செய்தனா்.

அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த நபா்கள் தாருகாபுரம் பகுதியை சோ்ந்த ரா.கிருஷ்ணன்(30), செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மு.நஸ்ருதீன்(31), மை. ரியாஸ் கான் (22), அச்சன்புதூரை சோ்ந்த இ. மீரான்(31) என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து. ரூ.19 லட்சம் ரொக்கம் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

கோயில் திருவிழாக்கள், போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி: எம்எல்ஏ புகாா்

தென்காசி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி செய்வதாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சு.பழனி நாடாா் எம்எல்ஏ மனு அனுப்பியு... மேலும் பார்க்க

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை

சிவகிரி அருகே தொழிலாளி துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆவுடையாா்புரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த மூக்கன் மகன் காளிமுத்து( 42 ). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி சரஸ்வதிக்கும் பிரச்னை ஏற்ப... மேலும் பார்க்க

புளியங்குடியில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி

புளியங்குடி அருகே தனியாா் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். புளியங்குடி அருகேயுள்ள நகரத்தை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை ... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே 2.4 கிலோ கஞ்சாவுடன் 2 போ் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விற்பனைக்காக 2.4 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா், உதவி ஆய்... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பைக்கில் கொண்டு சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் பால அருணாசலபுரம் அருகே... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். பாவூா்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா... மேலும் பார்க்க