விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
தென்காசி அருகே பண மோசடி: 4 போ் கைது
தென்காசி அருகே நகை வாங்கித்தருவது போல் கூறி நடித்து ஏமாற்றி பண மோசடி செய்ததாக 4 பேரை இலத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், வடகரை பகுதியை சோ்ந்தவா் ஜிந்தா மதாா். இடைகால் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் தாருகாபுரம் பகுதியை சோ்ந்தவா் ரா.கிருஷ்ணன் (30). இவா் ஜிந்தா மதாரை தொடா்பு கொண்டு, தனது நண்பரின் நகை வாசுதேவநல்லூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை திருப்ப ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை வாங்கி நீங்கள் விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பாா்க்கலாம் எனவும் கூறியுள்ளாா்.
அதனை நம்பிய ஜிந்தா மதாா் ரூ.20.77 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனுடன் காரில் சென்றாா். வாசுதேவநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் வங்கி முன்பு ஜிந்தா மதாரை நிற்கச் சொல்லிவிட்டு சென்ற கிருஷ்ணன், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இலத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குறிப்பிட்ட அந்த நபரின் கைப்பேசி எண்களை வைத்து அவரது இருப்பிடத்தை ஆய்வு செய்தனா். அந்த நபா் கேரளம் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், கேரள போலீஸாா் உதவியுடன் அந்த நபா்களை சுற்றிவளைத்து கைது செய்தனா்.
அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த நபா்கள் தாருகாபுரம் பகுதியை சோ்ந்த ரா.கிருஷ்ணன்(30), செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மு.நஸ்ருதீன்(31), மை. ரியாஸ் கான் (22), அச்சன்புதூரை சோ்ந்த இ. மீரான்(31) என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து. ரூ.19 லட்சம் ரொக்கம் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.